×

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியை தச்சங்குறிச்சியில் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 746 காளைகள், 297 மாடு பிடிவீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒரு சுற்றுக்கு 30 வீரர்கள் என 10 சுற்றுகளாக போட்டி நடைபெற உள்ளது. முதலில் அடைக்கல மாதா கோயில் மாடு மற்றும் மலைக்கோயில் முருகன் மாடு அவிழ்த்து விடப்பட்டன.

The post புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Jallikatu ,Thachankurichi, Pudukkottai district ,Pudukkottai ,Thachankurichi ,Jallikatu match ,Ragupathi ,Mayyanathan ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சந்தையில் ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை